தமிழக செய்திகள்

மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்று கடலுக்கு செல்லவில்லை.

ராமேஸ்வரம்,

தமிழகத்தில் நிலவி வரும் மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி வடக்கு பாக் ஜலசந்தி மற்றும் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக சூறைக்காற்று வீசி வருகின்றது.

இதனால் அப்பகுதியில் உள்ள மீன இறங்கு தளம் பாலம் மீது ராட்சத அலைகள் மோதுகின்றது. கடல் மிகவும் சீற்றமாக காணப்படுவதால் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. படகுகளை மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளதால் எப்போது பரபரப்பாக காணப்படும் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு