தமிழக செய்திகள்

எண்ணூரில் ரவுடி வெட்டிக்கொலை

எண்ணூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய கொலை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

ரவுடி வெட்டிக்கொலை

எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பொய் விஜி(வயது 25). ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர், நேற்று இரவு காசி விசுவநாதர் கோவில்குப்பம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் பொய் விஜியின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த பொய் விஜி பரிதாபமாக இறந்தார்.

காரணம் என்ன?

இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், கொலையான பொய் விஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

கொலையாளிகள் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்