தமிழக செய்திகள்

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1¼ கோடி தங்கம், செல்போன்கள் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1¼ கோடி தங்கம், இ-சிகரெட்டுகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த யூசுப் அலி (வயது 29), திருச்சியை சேர்ந்த சதாம் உசேன் (28) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

தங்கம்-செல்போன்கள் பறிமுதல்

அதில் விலை உயர்ந்த செல்போன்கள், இ-சிகரெட்டுகள், குங்குமப்பூ ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், 2 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்கமும், ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், இ-சிகரெட்டுகள், குங்குமப்பூ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ரூ.1 கோடியே 43 லட்சத்தது 80 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், இ-சிகரெட்டுகள், மின்சாதன பொருட்களை கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்து, அவர்களது பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு