தமிழக செய்திகள்

"ஸ்டேட் வங்கியில் 1.45 லட்சம் கோடி வராக்கடன்; கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" - சு.வெங்கடேசன் எம்.பி

ஸ்டேட் வங்கி வராக்கடன் தகவலை குறிப்பிட்டு, கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன் உள்ளது. அவற்றில் 19000 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை குறிப்பிட்டு, கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன். வசூல் ஆனது 19000 கோடி. மீதம் ஸ்வாஹா... கட்டத்தவறியவர்களின் பெயர்கள் ரகசியமாம்.

கல்விக் கடன், குறு நிதி கடன்களை வசூலிக்க கழுத்தில் துண்டைப் போடுவார்கள்... கனவான்கள் எனில் கழுத்துக்கு மேல் காண்பிக்க மாட்டார்கள்...இப்படியாக மக்கள் சேமிப்புகள் சூறை. கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" என்று கூறியுள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்