தமிழக செய்திகள்

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.666.43 கோடி செலவிடப்பட்டு உள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.666.43 கோடி தொகை செலவிடப்பட்டு உள்ளது. என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தல் செலவுகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.617.75 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து கூடுதல் நிதி கேட்டு கடிதம் எழுதப்பட்டது. அதன்படி, அனைத்து கலெக்டர்களும் மொத்தம் ரூ.126.18 கோடி தொகை கேட்டிருந்தனர்.

இந்தத் தொகையை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து, தேர்தல் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள பாக்கித் தொகைகளை செலுத்துவதற்காக ரூ.48.68 கோடி தொகையை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் சட்டசபை தேர்தலுக்காக ரூ.666.43 கோடி தொகை செலவிடப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு