தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்த அரசு பள்ளி மாணவருக்கு ரூ.8 ஆயிரம் பரிசு...!

திருவண்ணாமலை அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்த அரசு பள்ளி மாணவருக்கு எம்.எல்.ஏ ஒ.ஜோதி ரூ. 8 ஆயிரம் பரிசு வழங்கினார்.

தினத்தந்தி

செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட இலுப்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் முருகவேல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தினை வரைந்து உள்ளார்.

இந்த மாணவன் தான் வரைந்த ஓவியத்தினை ஒ.ஜோதி எம்.எல்.ஏ.விடம் காண்பித்து உள்ளார். அப்போது மாணவர் முருகவேல் வரைந்த படத்தினைப் பார்த்த எம்.எல்.ஏ ஒ.ஜோதி, அதே இடத்தில் மீண்டும் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் உருவப்படத்தை வரைய மாணவனிடம் கூறியுள்ளனர்.

சற்றும் தயங்காத மாணவன் முருகவேல் அதே இடத்தில் அமர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் மாணவன் வரைந்த படத்தை பார்த்து மகிழ்ந்த ஒ.ஜோதி எம்.எல்.ஏ மாணவனுக்கு ரொக்க பரிசாக ரூ. 8 ஆயிரம் வழங்கி பாராட்டினர்.

தொடர்ந்து பள்ளித் தலைமையாசிரியர் வி.ஆனந்தகுமார் மற்றும் ஆசிரியர்கள் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்