தமிழக செய்திகள்

பழனி தொகுதிக்கு ரூ.930 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

பழனி தொகுதிக்கு ரூ.930 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக இ.பெ.செந்தில்குமார் பேசினார்.

தினத்தந்தி

பழனி ஆர்.எப். சாலையில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி., நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, முன்னாள் நகராட்சி தலைவர் வேலுமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு இணை செயலாளர் புதுக்கோட்டை விஜயா, தி.மு.க.பேச்சாளர் கவியரசி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது நிதிநிலைமை காலியாக இருந்த நிலையில் முதல் பட்ஜெட்டில் செலவுகளை குறைத்துள்ளது. பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டத்தில் அரசு பஸ்களை பயன்படுத்துவேர் எண்ணிக்கை 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. விரைவில் 2,500 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளது.

பழனி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இங்கு ரூ.60 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளது. பழனி முருகன் கேவில் 2-வது ரோப்கார் திட்ட பணிகளை அடுத்த 1 ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி தொகுதி மக்களுக்காக ரூ.930 கோடியில் ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்