தமிழக செய்திகள்

தமிழ் எழுத்துகளுடன் "ஸ" - அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ் எழுத்துகளுடன் "ஸ" வையும் இணைத்துள்ளதாக அண்ணாமலையை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் நடைபெற்றது. வாடிகன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

இது தொடர்பாக வீடியோவை தனது டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இத்தாலியில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து என்று பதிவிட்டு இருந்தார். அமைச்சரின் டுவிட்டரை பகிர்ந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்று பதிவிட்டிருந்தார். அத்துடன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான தமிழணங்கு ஓவியத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் 'தமிழணங்கே' என்ற தலைப்பில் எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்கிற வரிகளுடன் தமிழ் தாயின் ஓவியத்தை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ் எழுத்துகளுடன் "ஸ" என்ற எழுத்தையும் இணைத்திருந்ததாக அண்ணாமலையை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பக அவர் தனது டுவிட்டரில், தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ஸ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார் என்று அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்