தமிழக செய்திகள்

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு 5 நாட்கள் பூஜை நடக்கிறது

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. 5 நாட்கள் பூஜை நடக்கிறது.

தினத்தந்தி

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து, சாமிக்கு தீபாராதனை காட்டினார். மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

பூஜை

இன்று (சனிக்கிழமை) முதல், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அதிகாலை5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதைத்தொடர்ந்து படி பூஜை நடைபெறும். இரவு 8.50 மணிக்கு நடை அடைக்கப்படும், இந்த பூஜை 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

5 ஆயிரம் பக்தர்கள்

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்த அய்யப்ப பக்தர்கள், தரிசனத்திற்கு வரும்போது, 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். அல்லது ஆர்.டி. லேப் மருத்துவ பரிசோதனை செய்ததற்கான நெகட்டிவ் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்