தமிழக செய்திகள்

தமிழக கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

நாகை,

கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வபோது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுறுவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாஜ் போன்ற பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழக கடலோர பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

கடலோரப் பகுதிகளில் தீவிரவாத செயல்கள், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கான  ஏற்பாடுகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து