தமிழக செய்திகள்

சாகித்ய அகாடமி விருது; எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் - டிடிவி தினகரன்

தமிழில் 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சிறுகுடி மக்களின் வாழ்வியலை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தும் "'நீர்வழிப் படூஉம்'" நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் எழுத்தாளர் தேவி பாரதி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழை, எளிய மனிதர்களுக்கு நிகழும் வறுமை, அவர்கள் படும் துயரங்களை கதைகளாகவும், நாவல்களாகவும் தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வரும் எழுத்தாளர் தேவி பாரதி அவர்கள் மேலும் பல படைப்புகளை உருவாக்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்