தமிழக செய்திகள்

குட்கா விற்ற கடைக்கு சீல்

குட்கா விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தினத்தந்தி

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு, பனையபுரத்தில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரிவிநாயகம், கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முக வேலன், கவுசல்யா அங்குசென்று குணசேகர் என்பரவது கடையில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வருவாய் துறையினர் மூலம் கடைக்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக உரிமையாளர் குணசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்