தமிழக செய்திகள்

சேலம்: மின் இணைப்பு வழங்க லஞ்சம்- பெண் உதவி பொறியாளர் கைது

சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்க பெண் உதவி பொறியாளர் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

சேலம்,

சேலத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட பெண் உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர்

சேலத்தை சேர்ந்த ஒருவர் தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு கொடுக்கும்படி சேலம் கே.ஆர்.தோப்பூரில் உள்ள மின்சார வாரிய அலுவலக உதவி பொறியாளர் கவிதா (வயது 43) என்பவரிடம் விண்ணப்பித்தார். அப்போது அவர் மின் இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கைது

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரத்தை உதவி பொறியாளர் கவிதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கவிதாவை கைது செய்தனர்.