தமிழக செய்திகள்

லாரியில் மணல் கடத்தியவர் கைது

லாரியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் மன்னார்புரம் - இட்டமொழி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் இதுதொடர்பாக சாத்தான்குளம் காலனியை சேர்ந்த லாரி டிரைவர் ராபின் (வயது 36) என்பவரை கைது செய்து, மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் சாத்தான்குளம் ஆர்.சி. கீழத்தெருவை சேர்ந்த கார்த்தீச பாண்டியை தேடி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை