தமிழக செய்திகள்

சந்தனக்கூடு ஊர்வலம்

செஞ்சியில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

தினத்தந்தி

செஞ்சி,

செஞ்சியில் உள்ள அசரத் சையத் யூசுப்ஷா அவுலியா தர்காவில் 89-ம் ஆண்டு சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் உருஸ் முபாரக் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பிறை கொடி ஏற்றி பாத்திகா ஓதி தத்ரூப் வழங்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் இரவு அசரத் சையத் யூசுப்ஷா அவுலியா தர்காவிலிருந்து சந்தனக்கூடு ஊர்வலமாக புறப்பட்டு செஞ்சி செட்டிபாளையம் சம்பாப்பூரில் அமைந்துள்ள அசரத் சையத் பதவுல்லா ஷா அவுலியா தர்காவை சென்றடைந்தது. ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலம்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடியபடி உற்சாகமாக சென்றனர்.. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) வரை சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை செஞ்சி உரூஸ் கமிட்டியார் சையத் அசுத்துல்லா, அப்துல் அஜீஸ், சர்தார், ஷாஜகான் ஷெரிப், சமியுல்லா மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் செய்திருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு