தமிழக செய்திகள்

மேல்சிறுவள்ளூர்பெரியநாயகி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

மேல்சிறுவள்ளூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

தினத்தந்தி

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி அமாவாசை நாளான நேற்று உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஊர் எல்லையில் இருந்து பெண்கள் பால்குடங்களை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதன்பிறகு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் 108 சங்குகள் வைக்கப்பட்டு, சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு வானவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு