தமிழக செய்திகள்

தீபாவளி போனஸ் கொடுக்காத கடையின் முன் குப்பை கொட்டிய தூய்மைப் பணியாளர்- வைரல் வீடியோ

தீபாவளி போனஸ் கொடுக்காத கடையின் முன் குப்பை கொட்டிய தூய்மைப் பணியாளர் குப்பை கொட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா ரோட்டில் எல்இடி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவர் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவரிடம், கடந்த 4-ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 20-ஆம் தேதிக்கு மேல் தருகிறேன் என ஜேம்ஸ் கூறியுள்ளார்.

ஆனால் அவர் 500 ரூபாய் கேட்டு தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து, கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கேட்டு, கொடுக்காத கடை முன்பு, தூய்மைப் பணியாளர் சிலர் குப்பையை கொட்டி செல்வது வாடிக்கையாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் வலுக்கட்டாயமாக, வியாபரிகளிடம் தீபாவளி பணம் கேட்கும் ஊழியர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உண்மையாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மதிக்கப்படுவார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்