தமிழக செய்திகள்

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூத்தாநல்லூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

தினத்தந்தி

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகையன், நகர தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி கூலியை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும். நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட துணை தலைவர் ரகுபதி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்