தமிழக செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

விக்கிரவாண்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தினத்தந்தி

விக்கிரவாண்டி, 

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பில் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம்-புதுச்சேரி சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் தலைமை தாங்கி 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கிருந்த சாலை பணியாளர்களிடம், மரக்கன்றுகளை நன்கு பராமரித்து வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், உதவி பொறியாளர்கள் அனிதா, வசந்தபிரியா, விஜயலட்சுமி, சாலை ஆய்வாளர்கள் சாந்தி, அருள்மொழி மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து