தமிழக செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

தினத்தந்தி

திருவண்ணாமலை

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.

கூடுதல் மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி முன்னிலை வகித்தார். தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் வரவேற்றார்.

விழாவில் சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான எம்.கே.ஜமுனா தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பார் அசோசியேஷன் தலைவர் ராமகிருஷ்ணன், லாயர் அசோசியேஷன் மூத்த வழக்கறிஞர் பழனி, மூத்த வழக்கறிஞர் பாபு உள்பட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்