தமிழக செய்திகள்

ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்

ஆத்தூர் பேரூராட்சியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.

ஆறுமுகநேரி:

ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரப்பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.கமாலுதீன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முருகன், துணைத்தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகரப்பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பஞ்சாயத்து ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT