தமிழக செய்திகள்

“துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்தவர் சசிகலா“ - கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சட்டசபையில் என்னை பார்த்து சிரித்ததற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்தவர் சசிகலா என்று கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அதிமுக ஆட்சியில் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறவில்லை. இதனால் தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் மாநிலம் முழுவதும் 12,000-த்திற்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தோம். மக்களின் கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தோம். மேலும் முடிந்தவரை நேரடியாக ஆட்சியர்கள் மற்ற அதிகாரிகளை சந்தித்து பிரச்னைகளை தீர்க்க முயன்றோம்.

நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகாரத்தையும் தாண்டி திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். கடந்த தேர்தலில் 1.1 சதவித வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. அவர் மருத்துவமனையில் இறந்த காரணத்தால் சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. சட்டசபையில் என்னை பார்த்து சிரித்ததற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்தவர் சசிகலா.

திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட பணி நாள்களை 150 நாள்களாக உயர்த்தவும், அன்றைய கூலியை அன்றே வழங்கவும் திமுக பரிசீலித்து வருகிறது.

மாணவர்களின் கல்விக்கடன் திமுக ஆட்சியில் முழுமையாக ரத்து செய்யப்படும். மேலும் முதியோர்க்கு வழங்கப்படும் உதவித்தொகையை தற்போது முறையாக அனைவருக்கும் வழங்காமல் கட்சியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வரும் திமுக ஆட்சியில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு