தமிழக செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீர் உடல்நலக் குறைவு

மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் மதுரையில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் வழக்கில் தொடர்புடைய மற்றொரு காவலரான முருகனின் ஜாமின் மனுவை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை