தமிழக செய்திகள்

உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள் எடப்பாடியாரே! - மாணிக்கம் தாகூர்

இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிக கச்சிதமாக பொருந்தும்! என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

சென்னை,

உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள் எடப்பாடியாரே! என்று மாணிக்கம் தாகூர்.

பரிதாபகரமானது

காங்கிரஸ் தங்களை கொள்கை கூட்டணி என்று மார்தட்டி கொள்கிறது. இப்போது வெறும் சீட்டுகளுக்காகவும் பதவிக்காகவும் அலைகிறது. கங்கிரஸ் காட்சியின் தற்போதைய நிலைமை மிகவும் பரிதாபகரமானது.

நரித்தனம்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிவிட்டது" என இபிஎஸ் விமர்சனம். வாக்கு சேகரிக்கும் போது ஒரு பேச்சும், தேர்தல் முடிந்ததும் வேறு பேச்சும் பேசுவதுதான் காங்கிரஸின் நரித்தனம் என்று சாடியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறிஇருப்பதாவது:-

டெபாசிட் இழந்து வரும் அதிமுக

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' யாருக்கு பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்து கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிக கச்சிதமாக பொருந்தும்!

பாஜகவின் அடிமை

​மத்தியில் பாஜகவிற்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் இபிஎஸ்-ன் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றி கொள்ளுங்கள் எடப்பாடியாரே!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.