தமிழக செய்திகள்

தாத்தாவின் பாலியல் தொல்லை.. பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அம்பலப்படுத்திய சிறுமி

சைல்டு லைன் அதிகாரிகள் நடத்திய விசாரணைக்குப் பிறகு, குழந்தைகள் காப்பகத்தில் சிறுமியை சேர்த்தனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த15 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். தாய், தந்தை இல்லாத காரணத்தினால் சிறுமி, அவளது தந்தை வழி தாத்தா- பாட்டி வீட்டில் வசித்து வந்தாள்.

சிறுமியை அவளது தாத்தா பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சிறுமியின் சிறிய தாத்தாவும் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி படிக்கும் பள்ளியில் சைல்டு லைன் மூலம் "நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்" குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்று உள்ளது. அப்போது அந்த சிறுமி தனக்கு நடக்கும் துயரத்தை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் அச்சிறுமி சேர்க்கப்பட்டாள். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பேத்தியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட தாத்தா முனுசாமி மற்றும் சிறிய தாத்தா குமரேசன் ஆகியோரை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு