தமிழக செய்திகள்

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் வரலட்சுமி (வயது 14). வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலை பள்ளிக்கு செல்லும் போது பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்துடன் வீட்டின் மாடிக்கு சென்று விட்டாள். வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றுள்ளனர்.

இந்த நேரத்தில் மாணவி அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். தகவல் அறிந்து வந்த குடும்பத்தினர் வாலாஜா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை