தமிழக செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலி

செய்யாறு அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலியானார்.

தினத்தந்தி

செய்யாறு

செய்யாறு அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலியானார்.

செய்யாறு தாலுகா இருங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் தாஸ் (வயது 12) அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி உடல் நலக்குறைவால் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மாணவனை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ பரிசோதனையின்போது டெங்கு காய்ச்சல் உறுதியானது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மோகன்தாஸ் இறந்து விட்டான். தொடர்ந்து மோகன்தாஸ் படித்து வந்த செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கிருமி நாசினி தெளித்து தீவிர சுகாதார பணி நடந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து