தமிழக செய்திகள்

மழலையர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வலிவலம் மாணிக்க விநாயகர் மழலையர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தினத்தந்தி

வாய்மேடு:

நாகை அருகே வலிவலம் மாணிக்க விநாயகர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 10-ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவில் நிர்வாகி மலர்மணி தொடங்கி வைத்தார். அவருக்கு பள்ளியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சிகளை கண்டுகளித்தனர். இதில் பள்ளி மாணவர்களுக்கு உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவில் நிர்வாகி மலர்மணி பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து