தமிழக செய்திகள்

தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணின் ஸ்கூட்டர் திருட்டு

ஆயிரம் விளக்கு பண்டாரி சாலையில் தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணின் ஸ்கூட்டரை மர்மநபர் திருடி சென்றார்.

தினத்தந்தி

ஆயிரம் விளக்கு பண்டாரி சாலையில் வசிப்பவர் கோமதி (வயது 28). இவர் அண்ணாசாலை பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பார். தனது ஸ்கூட்டரில் உணவு எடுத்து சென்று பிளாட்பாரத்தில் வைப்பார். நாய்கள் உணவு சாப்பிடும்வரை காத்திருப்பார். உணவை நாய்கள் சாப்பிட்ட பிறகு ஸ்கூட்டரில் வீடு திரும்புவார்.

வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு கோமதி தனது ஸ்கூட்டரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு நாய்களுக்கு உணவு கொடுத்தார். ஸ்கூட்டரில் சாவியை வைத்து விட்டதாக தெரிகிறது. சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்த கோமதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்கூட்டரை காணவில்லை. சாவியுடன் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை யாரோ, மர்ம நபர் நைசாக திருடிச்சென்று விட்டார். ஸ்கூட்டரில் வைத்திருந்த அவரது செல்போனும் பறிபோய் விட்டது.

இது குறித்து கோமதி, அண்ணாசாலை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்