தமிழக செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்... சென்னையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு

வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகர சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் காலம் கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிறகு, மேலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகர சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலில் சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நிற்கும்போது, ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்படும் இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்