தமிழக செய்திகள்

சேலத்தில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி

சேலம்

சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்குரு (வயது22). இவருடைய நண்பர் பிரகாஷ் (27). சம்பவத்தன்று 2 பேரும் சன்னியாசிகுண்டு பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் அங்கு வந்தனர். இதில் இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 5 பேரும், சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து