தமிழக செய்திகள்

2 பேருக்கு அரிவாள் வெட்டு; தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு

விக்கிரமசிங்கபுரத்தில் மாடு முட்டியதில் ஏற்பட்ட பிரச்சினையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் மாடு முட்டியதில் ஏற்பட்ட பிரச்சினையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாடு முட்டியதில் பிரச்சினை

விக்கிரமசிங்கபுரம் மில் அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 70). விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கணேசன் (44). இவருக்கு சொந்தமான மாடு, முருகனின் வீட்டுக்கு சென்று, அவரை முட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் முருகன், கணேசனை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த கணேசன் அரிவாளால் முருகனை வெட்டினார்.

அரிவாள் வெட்டு

இதையடுத்து முருகனும் அரிவாளால் கணேசனை வெட்டினார். இதற்கு துணையாக முருகன் மகன் மாரிமுத்து (40) இருந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமைடைந்த முருகன் அம்பை அரசு மருத்துவமனையிலும், கணேசன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். இதுதொடர்பாக முருகன், அவரது மகன் மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து