தமிழக செய்திகள்

வாடகை பாக்கியுள்ள கடைக்கு 'சீல்'

வாடகை பாக்கியுள்ள கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினத்தந்தி

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் வாடகை பாக்கியுள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், அலுவலர்கள் நேரில் சென்று கேட்டும் பணம் வசூலாகவில்லை. இதேபோல் நகரில் உள்ள பல வீடுகளில் கொள்ளிடம் குடிநீர் இணைப்பிற்கு வரி பாக்கி வைத்துள்ளனர். பலமுறை கூறியும் பணம் வசூலாகாததால், பஸ் நிலையத்தில் வரி பாக்கியுள்ள ஒரு கடை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் கே.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளிடம் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்