தமிழக செய்திகள்

வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைப்பு

சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சீர்காழி;

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் சிலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தவில்லை. இதனால் நேற்று நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் வரி பாக்கி செலுத்தாத 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும் பல்வேறு கடை உரிமையாளர்களிடம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கியை செலுத்துமாறு அறிவுறுத்தினர். அப்போது மேலாளர் (பொறுப்பு) ரமேஷ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து