தமிழக செய்திகள்

6 கடைகளுக்கு சீல் வைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

தினத்தந்தி

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

தேடுதல்

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நேற்று குட்கா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட முழுவதும் 85 வழக்குகள் பதிவுசெய்து 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீல் வைப்பு

குறிப்பாக தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்த திருவாருர், நன்னிலம், முத்துப்பேட்டை பகுதிகளில் உள்ள 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத செயல்களுக்கு எதிரான சிறப்பு தேடுதல் வேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா