தமிழக செய்திகள்

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். #SriLankaBlasts #Security

சென்னை,

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆப்ரஷேன் ஸ்ட்ரோமிங் எனப்படும் எந்த சோதனையில் சுமார் 200 போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.