தமிழக செய்திகள்

மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்

மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டன

தினத்தந்தி

களக்காடு:

களக்காடு அருகே ஊச்சிக்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் அரசின் அனுமதி இன்றி மண் கடத்தப்படுவதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு 3 பேர் பாக்லைன் எந்திரம் மூலம் லாரியில் குளத்து சரள் மண் கடத்திக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓடினர். இதில் போலீசார் விரட்டி சென்று ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் துரைராஜ் (வயது 42) என்பதும், தப்பி ஓடியவர்கள் பொக்லைன் டிரைவர் துளசி (30), லாரி உரிமையாளர் மகாராஜன் என்பதும் தெரியவந்தது. பின்னர் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், துரைராஜை கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து