தமிழக செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணை.!

செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை நாளை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கிறது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

செந்தில்  பாலாஜியை எப்போது முதல் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்து இரு நீதிபதிகள் அமர்வு முடிவுசெய்யும் என 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்திருந்த நிலையில், நாளை இந்த விசாரணை நடைபெறுகிறது.

மேலும், செந்தில் பாலாஜியை எந்த தேதியிலிருந்து காவலில் எடுக்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...