தமிழக செய்திகள்

"போதை பொருள் ஒழிப்புக்கு தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

திண்டிவனத்தில் பாமக சார்பில் பொது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது.

தினத்தந்தி

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தேட்டத்தில் பாமக சார்பில் பொது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது. நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிட்ட போது பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத்தலைவர் ஜி.கே.மணி உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டு பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பரந்தூர் விமான நிலையம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டம் போன்றவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

தெடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டிற்கான நிழல் நிதி நிலை அறிக்கையில் போதைப் பொருட்களால் அழிவு பாதைக்கு செல்லும் இளைஞர்களை மீட்டு ஆக்க பாதைக்கு அழைத்து செல்வதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

போதைப் பொருள் ஒழிப்பு தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்