தமிழக செய்திகள்

சென்னையில் 3 அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குக்கு தனி வார்டு - மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினத்தந்தி

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பருவகால காய்ச்சல்களும், நோய் பாதிப்புகளும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ளது. இதேபோல, நாள்தோறும் 15 முதல் 20 வரை பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே, டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு தலா 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக 65 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், இதில், கொசுவலை வசதிகளுடன் கூடிய 20 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளோருக்கு 24 மணி நேரம் கண்காணித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கஞ்சி, உப்பு சர்க்கரை கரைசல் நீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் ஆகியோருக்கு காய்ச்சல் சிகிச்சைக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு