தமிழக செய்திகள்

விவசாயி வீட்டுக்கு தீ வைப்பு; தந்தை-மகன் கைது

வந்தவாசி அருகே விவசாயி வீட்டுக்கு தீ வைத்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மு.துரை (வயது 50), விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் நாகலிங்கம் (55). இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நாகலிங்கம், அவரது மகன் அன்பரசு (21) ஆகியோர் சேர்ந்து துரையின் கூரை வீட்டை தீ வைத்து எரித்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகலிங்கம், அவரது மகன் அன்பரசு ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்