தமிழக செய்திகள்

2 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

தூத்துக்குடியில் 14 வயதுடைய 2 சிறுவர்களை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு:

கடந்த 2023-ம் ஆண்டு தூத்துக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய 2 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த மங்கேஷ்குமார் (வயது 26) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

7 ஆண்டுகள் சிறை தண்டனை:

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா நேற்று (24.6.2026) மேற்சொன்ன மங்கேஷ்குமாரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.