தமிழக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டா

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை 49 வயது ஓட்டல் தொழிலாளி. இந்த நிலையில் இவர் தனது மகளுக்கு குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT