தமிழக செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு

காதலிக்குமாறு வற்புறுத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாகன டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்

தினத்தந்தி

விழுப்புரம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு

விழுப்புரம் அருகே உள்ள காணை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி, அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் மகன் அந்தோணிராஜ் (25). சரக்கு வாகன டிரைவரான இவர், கடந்த சில மாதங்களாக அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளார். சம்பவத்தன்று அம்மாணவியை அந்தோணிராஜ், பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

டிரைவர் கைது

இதுகுறித்து அம்மாணவி, அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் சென்று நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அந்தோணிராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை