தமிழக செய்திகள்

தர்மபுரி அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,992 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2,312 கிலோவாக அதிகரித்தது. நேற்றுமுன்தினம் 1 கிலோ அதிகபட்சமாக ரூ.503- க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.21 விலை குறைந்து அதிகபட்சமாக ரூ.482-க்கும், குறைந்தபட்சமாக ரூ.272-க்கும், சராசரியாக ரூ.411.91-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 52 ஆயிரத்து 406 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு