தமிழக செய்திகள்

பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரித்து உள்ளது.

தினத்தந்தி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 3,776 கிலோ பட்டுக்கூடு வந்தது. இதனிடையே நேற்று பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,903 கிலோவாக குறைந்தது. இதனால் நேற்று பட்டுக்கூடு கிலோவிற்கு ரூ.43 விலை அதிகரித்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.640-க்கும், குறைந்தபட்சமாக ரூ.363-க்கும், சராசரியாக ரூ.540.35-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்து 28 ஆயிரத்து 592-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை