தமிழக செய்திகள்

சிம்கோ காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு

வேலூரில் சிம்கோ காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

தினத்தந்தி

தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் (சிம்கோ) உள்ளது. இந்த சங்கத்தில் கண்காணிப்பாளர், கணக்காளர், கிளை மேலாளர், விற்பனையாளர், அலுவலக உதவியாளர் என காலி பணியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, தேசியா மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் நடந்தது. எழுத்து தேர்வு காலை 10 மணி முதல் 11.30 மணி வரையும், பகல் 2 மணி முதல் 3.30 மணி வரையும் நடந்தது. தேர்வில் பங்கேற்க 5,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சுமார் 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு மையங்களை சிம்கோ மேலாண்மை இயக்குனர் பி.கிருஷ்ணன் பார்வையிட்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு