தமிழக செய்திகள்

அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்

பணி நியமனம் வழங்கக்கோரி சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐ.சி.எப்.-ல் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஐ.சி.எப்.-ல் பயிற்சி பெற்றவர்களுக்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் பணி நியமனம் வழங்கவில்லை என்றும், இதனால் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த 20-ந்தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை எனக்கூறி இன்றைய தினம் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து