சிவகாசி,
சிவகாசியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி மாவட்டம் ஞானகிரி சாலையைச் சேர்ந்த கண்ணன் என்பவர், தனது காரை சிவகாசி ரெயில் நிலையம் அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்தார். அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. அந்த காரின் மதிப்பு சுமார் 16 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றி எரிந்தபோது காரில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.