தமிழக செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள்; விசாரணை குழு அமைப்பு: முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க குழு அமைக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் திடீரென தொடர் கனமழை பெய்தது. ஒரு நாளில் பல மணிநேரம் பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து முடங்கியது.

இதேபோன்று மறு நாளும் பெருமளவில் மழை பெய்தது. இதனால், சென்னையின் முக்கிய பகுதிகள், புறநகர் மற்றும் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கின. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவற்றில் சென்னை தியாகராய நகரும் ஒன்று.

இந்த நிலையில், தமிழக சட்டசபையின் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக வடிவமைக்கப்படாத சூழலால் தியாகராய நகரில் மழைநீர் தேங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க குழு அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து